அமைதியை உலகத்தில் நிலைக்க செய்! COVID-19
அமைதியை உலகத்தில் நிலைக்க செய்!
இறைவா! அகில உலகத்தின் அதிபதியே!
எங்கள் மீது கருணை காட்டி எங்களை மன்னித்து கொரோனா வைரஸிலிருந்து எங்களையும், உலக மக்களையும் பாதுகாத்திடுவாய்
எங்கள் இறைவா!
அகில உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து உணவளிப்பவனே! நாங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தது உலக மக்களையும், எங்களையும் எங்கள் சந்ததிகளையும் கொரோனா வைரஸிலிருந்தும் அது போன்ற கொடிய நோய்களில் இருந்தும் காப்பாற்றி சந்தோசத்தை எங்களுக்கு தா
எங்கள் இறைவா!
இறைவா! நாங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளையும், அனைத்து பாவங்களையும் மன்னித்து எங்களை நரக நெருப்பிலிருந்தும் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்திடுவாய்
எங்கள் இறைவா!
இறைவா! நாங்கள் வேதனையாலும், சோதனையாலும் வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து குணமாக்கி அனைவரின் பயத்தையும் போக்கி மனதில் நிம்மதியையும்,சந்தோசத்தையும் உலகில் நிலைக்க செய்திடுவாய்
எங்கள் இறைவா!
எங்கள் இறைவா! நாங்கள் கேட்க்கும் பிராத்தனையை ஏற்று கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்றி அச்சத்தை போக்கி உலகத்தை இயல்பு நிலைக்கு மாற்றி சமாதானத்தையும், அமைதியையும் உலத்தில் நிலைக்க செய்திடுவாய்
எங்கள் இறைவா!
ஆமீன்
#CORONA #MEDICINE #JAPAN #CHINA #INDIA #VijayaBaskar #Anvar #Breakingnews
#Coronavirus #CoronavirusIndia #CoronavirusSymptoms #CoronavirusUpdate
#Coronavirus #CoronavirusIndia #CoronavirusSymptoms #CoronavirusUpdate

Comments
Post a Comment